சாய் பல்லவி, அண்ணா மட்டும் நோ.. சிவகார்த்திகேயன் செயலால் கடுப்பான மனைவி

Sivakarthikeyan Sai Pallavi Tamil Actors Tamil Actress
By Bhavya Oct 19, 2024 07:30 AM GMT
Bhavya

Bhavya

in Celebrity
Report

சிவகார்த்திகேயன் 

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்து இருக்கும் அமரன் படம் வரும் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது.

படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் நேற்று அமரன் இசை வெளியீட்டு விழா சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. அந்த விழாவில் லோகேஷ் கனகராஜ், மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

தற்போது, தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்த உள்ள நிலையில், அடுத்து அந்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்க தயாராகியுள்ளார் என்ற கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

சாய் பல்லவி, அண்ணா மட்டும் நோ.. சிவகார்த்திகேயன் செயலால் கடுப்பான மனைவி | Sivakarthikeyan Say Dont Call Brother

விஜய் எப்படி ஹீரோயின்களை ஹைலைட் செய்து பேசுவாரோ அதே போல சிவகார்த்திகேயன் சாய் பல்லவி குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன் பேச்சு 

அதில், "சாய் பல்லவி என்றால் அது ஒரு பிராண்ட், 'பிரேமம்' படத்தை பார்த்து விட்டு சாய் பல்லவிக்கு நான் போன் செய்து உங்கள் நடிப்புக்கு நான் ரசிகன் என்று கூறினேன். அதை கேட்டு தேங்க்யூண்ணா என்று கூறினார்.

நான் உடனே அண்ணான்னு மட்டும் கூப்பிடாத, அந்த படத்துல வர மாதிரி என்ன மறந்து கூட போயிடுன்னு சொன்னேன். ஃப்யூச்சர்ல நீயும் நானும் ஜோடியாக கூட நடிக்கலாம்னும் ஒரு பிட்டு போட்டேன்.

சாய் பல்லவி, அண்ணா மட்டும் நோ.. சிவகார்த்திகேயன் செயலால் கடுப்பான மனைவி | Sivakarthikeyan Say Dont Call Brother

அன்று சொன்ன வார்த்தை தற்போது பலித்துவிட்டது. சாய் பல்லவி ஒரு நடிகை என்பதை தாண்டி ஒரு சிறந்த பெண் அதனால் தான் அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்" என்று கூறியுள்ளார்.

சாய் பல்லவி, அண்ணா மட்டும் நோ.. சிவகார்த்திகேயன் செயலால் கடுப்பான மனைவி | Sivakarthikeyan Say Dont Call Brother

அவ்வாறு சிவகார்த்திகேயன் பேசும்போது சாய் பல்லவி கன்னம் எல்லாம் வெட்கத்தில் சிவந்து விட்டது. இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனின் மனைவி கொடுத்த ரியாக்‌ஷன் தான் தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.