அந்த நடிகை பக்கமே போகக்கூடாது!! நெருக்கமாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு மனைவி போட்ட கண்டீசன்..
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறந்து வருபவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது பல படங்களை தயாரித்தும் முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்தும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.
பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஒரு புது பிரச்சனை ஆரம்பித்திருக்கிறதாம்.
அதாவது முதலில் நடிகை சாய் பல்லவியை இப்படத்தில் நடிக்க திட்டமிட்டு கமிட் செய்தது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. ஆனால் சாய் பல்லவி சில காரணங்களால் விலகவுள்ளதாக செய்திகள் பரவியது.
இதனால் சிவகார்த்திகேயன், டான், டாக்டர் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா அருள் மோகனை நடிக்க வைக்க படக்குழுவினரிடம் கூறியிருக்கிறாராம். இந்த விசயம் சிவகார்த்திகேயன் மனைவியின் காதுக்கு சென்றுள்ளது.
உடனே இனிமேல் பிரியங்காவுடன் நடிக்க கூடாது என்று சிவகார்த்திகேயனுக்கு கண்டீசன் போட்டிருக்கிறாராம். இதனால் சீதா ராமன் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
ஆனால், நடிகை பிரியங்கா, நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருவதால் தான் சிவகார்த்திகேயன் அவரை வேண்டாம் என்று கூறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் நடிகை சாய் பல்லவில், விரைவில் துவங்கவுள்ள அப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்ற தகவலும் லீக்காகியுள்ளது.