மகனை தூக்கிவிட்ட இயக்குனரை அசிங்கப்படுத்திய சூர்யாவின் அப்பா! ஆப்படித்த குடும்பம்?
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளத்துடன் வெளியாகும் படங்கள் குறைந்த வண்ணம் இருக்கிறது. அப்படி முரட்டு கிராமத்து கதையாக இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் பருத்திவீரன். நடிகர் சிவகுமாரின் மகனான கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகினார். நடிகை பிரியாமணி ஜோடியாக நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு சில விருதுகளையும் பெற்றது.
இந்நிலையில் படம் வெளியாகிய சமயத்தில் இயக்குனர் அமீருக்கும் கார்த்தி குடும்பத்திற்கு பிரச்சனை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியது. அது என்ன காரணம் என்றால், படத்தினை அமீர் சில ஏரியாக்களில் உரிமைகளை வாங்கியதாகவும் அதனால் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாம்.
இதன்பின் சிவகுமாரே இதில் தலையிட்டு அமீருடன் பிரச்சனையை பெரிதாக்கிவிட்டாராம். இதனால் அமீர் மீது அவரது குடும்பமே கோபத்தில் இருந்து வருகிறதாம். அப்படத்தோடு உங்க சவகாசமே வேண்டாம் என்று அமீர் ஒதுங்கியபடியே இருந்து வருகிறாராம்.