புடவையை விற்க இப்படியொரு செயலை செய்தாரா நடிகை சினேகா!! கண்கலங்கிய பேசிய பிரபலம்..
90-ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இரு குழந்தைகளுக்கு தாயாகினார். அதன்பின் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த சினேகா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்தார்.
தற்போது நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகளுக்கு பின் அவருக்கு ஜோடியாக கோட் படத்தில் நடிகை சினேகா நடித்தும் வருகிறார். தற்போது ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் மிகவும் கஷ்டப்பட்டு வரும் போட்டியாளரான சுரேஷ் என்பவரின் ஆட்டத்தை பார்த்து வியந்திருக்கிறார் நடிகை சினேகா. என் வீட்டிற்கு கூட்டிச்சென்ற் விருந்து வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். வார்த்தையில் தான் சொல்கிறார் என்று பார்த்தால் சினேகா, சுரேஷை ஈசிஆரில் இருக்கும் தன் வீட்டிற்கு கூட்டிச்சென்று தரமான உணவுகளை பரிமாறியிருக்கிறார்.
கண்கலங்கிய போட்டியாளர் சுரேஷ் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் கசிய, சினேகா டி நகரில் ஆரம்பித்திருக்கும் சேலை கடையின் விளம்பரத்திற்காக தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்று சிலர் விமர்சித்து இருக்கிறார்கள்.
உண்மையில் அவர் இதை வைத்து விளம்பரம் செய்கிறர் என்றால் 100 புடவையை கொண்டு போய் ஏழை மக்களுக்கு வாரி வழங்கிவிட்டு வரலாம், அவர் அப்படி செய்யவில்லை, இதனை ஆத்மாத்தமாக தான் செய்துள்ளார் என்று விமர்சகர் செய்யாறு பாலு ஆதரவாக பேசியிருக்கிறார்.