சினேகா - பிரசன்னா காதல் வாழ்க்கையை கடந்து வந்தது இப்படித்தான்!! க்யூட் ஃபேமிலி புகைப்படம்
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. அஜித், விஜய், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
பிரசன்னாவுடன் திருமண வாழ்க்கை
அதன்பின் 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பின் விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளை பெற்றார். தற்போது மீண்டும் வெள்ளித்திரை சின்னத்திரை என்று ரிஎண்ட்ரி கொடுத்து வருகிறார். அப்படி சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
விவாகரத்து வதந்தி
சில மாதங்களுக்கு முன் நடிகை சினேகா பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவியது. இதெல்லாம் பொய் என்று சினேகா, பிரசன்னாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டும், பிரசன்னா அதெல்லாம் இல்லை என்று கண்டிப்போடு டிவிட் செய்தும் முற்றுப்புள்ளி வைத்தனர்.
பயில்வான் கோபம்
இந்நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் உண்மையை பகிர்ந்துள்ளார். இப்படி தவறான செய்திகளால் பரபரப்பை ஏற்படுத்தும் வதந்திகளை வெளியிட்டு வருவது மிகவும் தவறு என்று கூறியுள்ளார்.
மேலும் பிரசன்னா மூன்றாம் ஆண்டு டாக்டர் பட்டப்படிப்பு பயிலும் போது அதை நிறுத்திவிட்டு நடிப்பு மீது ஆர்வம் கொண்டு அதை உதறிவிட்டு நடிக்க ஆரம்பித்தார். சினேகாவுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை. இரவு பார்ட்டிக்கு சென்ற போது தான் வாய்ப்பு கிடைத்து நடிக்க ஆரம்பித்தார். அப்படிதான் தற்போது புன்னகை அரசியாகினார்.
பிரசன்னா மற்றும் சினேகா வெளிநாட்டில் படப்பிடிப்பு சென்ற போது இருவருக்கும் காதல் உருவாகி திருமணம் செய்து கொண்டனர். சந்தோஷாமாக வாழும் அவர்களின் வாழ்க்கையில், எந்த சூழலிலும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பே இல்லை. யாரோ உள்நோக்கத்துடன் இதனை பரப்பி வருகிறார்கள் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார் பயில்வான்.
பழிவாங்கிய தொலைக்காட்சி
ஒரு தொலைக்காட்சி சேனல் ஒரு விசயத்திற்காக சினேகாவிடம் பேட்டிக்கொடுக்க கேட்டுள்ளனர். ஆனால் சினேகா படப்பிடிப்பில் இருப்பதால் அவகாசம் கேட்டும், அதற்காக பணம் கேட்டதற்காகவும் சினேகா மீது இப்படியான வதந்திகளை பரப்பியதாக பயில்வான் கூறியுள்ளார்.