10 வருட திருமண வாழ்க்கையில் விவாகரத்து.. நடிகை சினேகா எடுத்த போட்டோஷூட்
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை சினேகா. அஜித், விஜய், கமல், ச்ம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவுடன் ஜோடியாக நடித்து அவரை காதலித்து வந்தார்.

பிரசன்னாவுடன் விவாகரத்து
பின் 2012 ஆம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளை பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். திருமணத்திற்கு பின் குழந்தை, குடும்பம் என்று பார்த்து வந்த சினேகா குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வரும் சினேகா 10 ஆண்டுகளுக்கு பிறகு கணவர் பிரசன்னாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியவுள்ளதாக தகவல் வெளியானது.
விவாகரத்து செய்து பிரியவுள்ள செய்தி வைரலானதை கேட்டு சினேகா கணவருடன் எடுத்த வீக்கெண்ட் புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். இதனைதொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வந்தார் சினேகா.

முற்றுப்புள்ளி
இந்நிலையில் பிரபல நகைக்கடையின் விளம்பரத்திற்காக போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் சினேகா பிரசன்னா என்று பெயரிடப்பட்ட போட்டோஷூட் பதிவாகியுள்ளது. அப்படியென்றால் இன்னும் தன் கணவரின் பெயரை நீக்கவில்லை என்று விவாகரத்து ரூமருக்கு மறுபடியும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சினேகா. ஒரு சந்தோஷமான தம்பதியினரின் வாழ்க்கையில் ஏன் இப்படி ரூமரை கிளப்பி கெடுக்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி கேட்டு திட்டி வருகிறார்கள்.
