எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திட்டு இருக்க இதான் காரணம்!! வெளிப்படையாக பேசிய நடிகை சினேகா

Sneha Tamil Actress Actress
By Edward Apr 17, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. அஜித், விஜய், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பின் விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளை பெற்றார்.

எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திட்டு இருக்க இதான் காரணம்!! வெளிப்படையாக பேசிய நடிகை சினேகா | Sneha Talk About Emotional Scene Her Personal

தற்போது மீண்டும் வெள்ளித்திரை சின்னத்திரை என்று ரிஎண்ட்ரி கொடுத்து வருகிறார். அப்படி சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும் நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து அவருக்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்தும் வருகிறார். சினேகா பற்றிய பல விசயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பல ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கும் போது நடிகை சினேகா அளித்த பேட்டியொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் ஜாலியா இருக்காங்க, ஏசில போராங்க வராங்க, அவங்களுக்கு என்ன ஜாலியா இருப்பாங்க என்று எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.]

எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திட்டு இருக்க இதான் காரணம்!! வெளிப்படையாக பேசிய நடிகை சினேகா | Sneha Talk About Emotional Scene Her Personal

அப்படி எல்லாம் இல்லை, சில நேரத்தில் ரொம்ப சந்தோஷமா இருப்போம் சோகமான சீன் கொடுப்பாங்க, சோகமா இருப்போம் சந்தோஷமான சீன் கொடுப்பாங்க. இந்த எல்லா எமோஷ்னலையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திட்டு நடிப்பது எல்லாமே ரசிகர்களுக்காக தான். அவர்கள் பார்த்து ரசிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள். எனக்கு புன்னகை அரசி என்ற பெயரை கொடுத்ததே என் ரசிகர்கள் தான். என் சிரிப்புக்கு காரணம் அவர்கள் தான்.