ஒரு வாட்டி போட்ட அந்த ஆடையை திருப்பி போடமாட்டேன்.. வெளிப்படையாக பேசிய சினேகா!!
மலையாள மொழி படங்களில் நடித்து வந்த சினேகா, என்னவளே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசூல் ராஜா எம்பிபிஎஸ எனப் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். நடிகை சினேகா, பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சினேகா அளித்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், ஒரு முறை பத்திரிகை ஒன்றில் சினேகா ஒரே உடையே தான் போடுகிறார். அவருக்கு வேற உடை இல்லை என்று கூறியிருந்தார்கள்.
நிறைய விமர்சனங்கள் எனது ஆடை பற்றி வந்தது, இதனால் நான் அணிந்த ஆடையை திருப்பி அணிய மாட்டேன். நான் அணிந்த ஆடையை தெரிந்தவர்களுக்கு இல்லை நண்பர்களுக்கு கொடுத்துவிடுவேன் என்று சினேகா கூறியுள்ளார்.