என்ன சமந்தாவை வெறுப்பேற்ற சோபிதா இப்படி எல்லாம் செய்தாரா.. சமந்தா ரொம்ப பாவம் தான்
சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா, மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 முதல் சம்பளம் வாங்கியவர் அப்படியே நாயகியாக நடிக்க தொடங்கி இப்போது அசுர வளர்ச்சி கண்டுள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் குஷி திரைப்படம் வெளிவந்தது ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை அந்த படம் பெறவில்லை. அதன் பின், உடல்நல பிரச்சனை காரணமாக நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்தார்.
தற்போது, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமந்தா நடிப்பில் வரும் நவம்பர் 7 - ம் தேதி சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாக உள்ளது. இந்த சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.
சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமந்தா குறித்தும் அவர் முன்னாள் கணவரின் காதலியான சோபிதா துலிபாலா குறித்தும் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார்.
சோபிதாவின் செயல்
அதில், " சோபிதா தன்னை ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என கூறுகிறார். அவரது முப்பாட்டன்கள் எல்லாம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்.
ஆனால் சமந்தாவை எப்படியெல்லாம் வெறுப்பேற்ற முடியுமோ அதை அனைத்தையும் மிகவும் சிறப்பாக சோபிதா செய்து வருகிறார். சமீபத்தில் கூட சமந்தா நாயாக பிறக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
அவர் தங்கையின் பெயர் கூட சமந்தா தான் இருப்பினும் நடிகை சமந்தாவை வெறுப்பேற்ற சோபிதா இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார்" என்று கூறியுள்ளார்.