நெப்போலியன் மகனுக்கு திருநெல்வேலி வீட்டு பெண் எடுத்த நோக்கம்!! பிரபல கூறிய தகவல்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். சில ஆண்டுகளுக்கு முன் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். உடல் நிலை சரியில்லாத அவரது மகனுக்காக அமெரிக்காவில் பல தொழில்களை ஆரம்பித்து நல்ல ஒரு தந்தையாக பெயர் எடுத்திருக்கிறார். சமீபத்தில் 25 வயதான மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் செய்ய நெப்போலியன் ஏற்பாடு செய்திருந்தார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழையும் நெப்போலியன் கொடுத்திருந்தார். சில தினங்களுக்கு முன் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்-க்கும் அக்ஷயா என்பவருக்கும் நிச்சயம் முடிந்துள்ளது. நெப்போலியனின் வருங்கால மருமகள் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகாந்தர் என்பவரின் மகள் என்று தெரியவந்துள்ளது. மகன் தனுஷ் வீடியோ காலில் இருக்க இரு குடும்பத்தினரும் நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கிறார்கள்.
நெப்போலியன் மகனுக்கு ஏழை வீட்டில் பெண் எடுத்த நோக்கம் என்ன என்று சினிமா விமர்சகர் சோபிதா ஜோசப் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அன்பாய் பார்த்து கொண்ட மகனுக்கு அதேபோல் அன்பாய் பார்த்துக் கொள்ளும் பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தார். அவர் நினைத்தால் கோடீஸ்வர பெண்ணை கல்யாணம் செய்து வைத்திருக்கலாம். வேலைக்காரியை வைத்துக்கொண்டு பார்த்திருக்கலாம்.
ஆனால் அவரும் அவர் மனைவியும் தான் பார்த்துக்கொள்கிறார்கள். அப்படி ஒரு கோடிஸ்வர பெண்ணை பார்த்து வைத்தால் நன்றாக பார்க்கமுடியாது. அவரே இரு வேலையாட்களை வைத்து பார்க்க சொல்வார். அதனால் தான் ரொம்ப ஏழ்மையான பெண்ணை, படித்திருக்கும் பெண்ணை பார்த்திருக்கிறார். தனுஷ் யார் என்று அந்த பெண்ணுக்கு தெரியும், உலகத்திற்கே தெரியும். பணத்திற்காக எல்லாம் கல்யாணம் பண்ணவில்லை. இவர்களின் திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டு விசாவுக்காக காத்திருக்கிறார்கள்.
பொறுப்பு துறப்பு : குறித்த தகவலை சினிமா விமர்சகர் சபிதா ஜோசப் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த கருத்துக்களை தான் விடுப்பு தளத்தில் பகிர்ந்துள்ளோமே தவிர, அவர் கூறி தகவலுக்கும் விடுப்பு தளத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.