என்ன தம்பி என்ன ஆச்சு.. ஹைதராபாத் அணியை போலந்து எடுத்த சென்னை! சோகத்தில் காவ்யா மாறன்
நேற்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. ஏற்கனவே இந்த இரு அணிலுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் அபார வெற்றியை தன்வசப்படுத்தி இருந்தது ஹைதராபாத் அணி.
இதை தொடர்ந்து ரிவெஞ் எடுத்த தீருவோம் என சென்னை அணியின் ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தனர். அதன்படியே நேற்று சென்னையில் நடந்த போட்டியில் ஹைதராபாத் அணியை போலந்து எடுத்தனர்.
கடப்பாரை பேட்டிங் லைன் அப் என இதுவரை பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த ஹைதராபாத் அணி, டோடல் வாஷ் அவுட் ஆனது. அதுவும் 134 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் பறிகொடுத்து தலையில் துண்டை போட்டுக்கொண்டனர். ஹைதராபாத் நடந்த போட்டியில் சென்னை தோல்வியை தழுவியபோது, ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் சென்னை அணியை கலாய்த்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் சரமாரியான அடி வாங்கி அமைதியாகியுள்ள ஹைதராபாத் அணியை சென்னை ரசிகர்கள் மீம்ஸ் போட்டு போலந்து எடுத்து வருகிறார்கள். போட்டியின் தோல்வி காரணமாக காவ்யா மாறன் சோகமாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Revenge taken successfully 😁 #CSKvsSRH pic.twitter.com/1ffbbDUnQg
— _meraj_pathaan_ (@Meraj_Pathaan) April 29, 2024
IT'S REVENGE STORY 🤫🔥#CSKvsSRH #IPL2024 #IPL pic.twitter.com/M83WfNdL11
— Prabhakar (@itz_Prabhaa) April 29, 2024