ஸ்ரீதேவி எனக்கு தங்கச்சி மாதிரி? சம்பந்தம் பேசிய அம்மாவிடம் கமல் ஹாசன் இதைதான் கூறினாராம்!
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகர் நடிகையில் இருந்தவர்கள் கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி. 80களுக்கு முன்பே இருவரும் நடித்து புகழ் பெற்றாலும் முன்னணி நடிகர்கள் என்ற அந்தஷ்த்தை பெற்று கொடுத்த ஆண்டு 1980கள் தான். கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த சகலகலா வல்லவன், 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம் போன்ற அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இவர்களின் கெமிஸ்ட்ரி அதிகமாக வேலை செய்ததால் உண்மையிலேயே இவர்களை ஜோடியாக அனைவரும் ஏற்க ஆரம்பித்து விட்டனர்.
ஆனால், இருவருக்கும் இடையே பல கிசுகிசுக்களும் வதந்திகளும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. பல நடிகைகளுடன் ஆரம்பகாலத்திலும் கமல் சக நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டார். இதனை கமலும் ஸ்ரீதேவியும் பெரிதாக கண்டு கொள்ளாமல் அப்படியே போறபோக்கில் விட்டனர். ஆனால் திரைக்கு வெளியே இரண்டு பேரும் நல்ல நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் மட்டுமே.
அவர்களை சுற்றி பல கிசுகிசுக்கள் ஆரம்ப காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஏன் இன்றும் கூட சிலர் இருவரும் நெருக்கமாக இருந்தனர் என கிளப்பி வருகின்றனர் என்று உதறினார்கள். ஒரு பேட்டியில் கமல், ஸ்ரீதேவியின் தாய் தன்னிடம் வந்து அவளை திருமணம் செய்யுமாறு கேட்டார். திரும்பத் திரும்ப கமலஹாசனை ஸ்ரீதேவி அம்மா கேட்டதால் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக பழகி விட்டோம்.
குடும்பத்தில் உள்ள ஒருவரை மணந்து கொள்வது சரியல்ல என்றும் கூறினாராம். மேலும், ஸ்ரீதேவி பற்றி பேசும் போது மிகவும் வேதனை அடைந்து கமல் கூறியதாவது, ‘ஸ்ரீதேவி எனக்கு தங்கை போன்றவர். தேவியின் அம்மா எனக்கு அவர் கையாலேயே சாப்பாடு வழங்கியிருக்கிறார். இதுபோன்ற தேவையில்லாத வதந்திகள் கிளப்ப வேண்டாம் ஆரம்பத்தில் ஸ்ரீதேவியை 13 வயதில் சந்தித்துள்ளார்.
அதன்பின் மூன்று முடிச்சு படத்தில் நடித்துள்ளார். அந்த நேரத்தில் கமலஹாசன் மிகப் பெரிய நடிகராக இருந்தார். ஸ்ரீதேவி கமலஹாசனை சார் என்று தான் அழைப்பாராம். இதைதொடர்ந்தும் அப்படியான வதந்திகள் பேசப்பட்டு வந்தன என்று கூறப்படுகிறது.