நம்ம கனடா பொண்ணு சூப்பர் சிங்கர் ஜெசிக்காவா இது? மாடனாக ஈழக்குயில் இப்போ என்ன செய்றாங்கனு தெரியுமா ?.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளிநாட்டுவாழ் தமிழ் மக்கள் கலந்து கொள்வது அறிதான விஷயமாக இருக்கும். அதிலும் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் வருடத்திற்கு ஒருவரை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
தற்போது சீசன் 8-ஐ துவக்கி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் தங்கள் திறமையை நிரூபித்து வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஏங்கி இருப்பார்கள். இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 4ல் இரண்டாம் இடம்பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா.
தன் குரலால் அனைவரையும் உருகவைத்து மனதை கரைய வைத்தவர் ஜெசிக்கா. இவர் தான் பரிசாக பெற்ற 1 கிலோ தங்கத்தை தமிழக மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து ஒருசில பாடல்களை பாடிய ஜெசிக்கா தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன் ‘நினைவுகள்’ என்ற கனடா நாளிதழில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது 2021ல் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாடர்னாக மாறி க்ளாமர் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.