பழி வாங்க நினைத்த சுந்தர் சி!! கடைசியில் காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி..
தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சுந்தர் சி, அரண்மனை 4 படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் அரண்மனை 4 படம் மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வரும் சுந்தர் சி, நடிகர் பிரசாந்துடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு முக்கியமான ஒரு விசயத்தை கூறியிருந்தார்.
என் படங்களை உரிமம் வாங்காமல் காப்பி அடித்து தெலுங்கு படம் எடுத்தார்கள் என்றும் அதற்கு பழி வாங்க வேறொரு 4 படங்களை என் படத்தில் காப்பி அடித்து எடுத்ததாகவும் அந்த படத்தையே ஒரு தெலுங்கு படத்தில் காப்பி அடித்து ரிலீஸ் செய்திருப்பதை பார்த்து நானே அதிர்ச்சியாகிவிட்டதாக சுந்தர் சி காமெடியாக தெரிவித்துள்ளார். என் மூன்று படத்தை காப்பி அடுத்து தெலுங்கு படத்தில் வைத்திருந்தது இயக்குனர் மீது கோபம் இல்லை, தெலுங்கு சினிமா மீதே எனக்கு கோபம் தான்.
அப்படி நானும் தெலுங்கு சினிமாவை பழிவாங்கிறேன் என்று தெலுங்கு படத்தையே நான் காப்பி அடித்து எடுத்தது தான் வின்னர் படம். அதற்கு பிரசாந்த், 4 இல்லை, 10 டிவிடி கொடுத்தாரு, பர்ஸ்ட் ஆஃப் இந்த 5 டிவிடி, செகெண்ட் ஆஃப் இந்த 5 டிவிடி, இதான் படம் என்று கூறினார். பழிவாங்குற கதையில தோற்றதே நான் தான். ஒரு சீனில் ஹீரோயினுக்கு ஹீரோவை அடிவாங்க வைக்கவேண்டும் என்று ஆசை.
டோர் மேட்டில் வாழைத்தோலை வைத்து கால் வழிக்கு ஹீரோ வழிக்கு விழும் காட்சி. வடிவேலு வந்துட்டேன்னு சொல்லி விழும் காட்சி வைத்தேன். வின்னர் படம் ரிலீஸ் ஆகி நல்லபடியாக ஓடியது. காலையில் எழுந்து டிவியில் தெலுங்கு படத்தின் ஹைலைட் போட்டாங்க, அப்படி ஒரு டிரைலரில், ஒரு சீனை ஹைலைட்ஸ் ஆக போட்டார்கள்.
அந்த சீனில் ஹீரோ ஓடிவர்றாரு, பிரம்மானந்தம் நடுவில் வர்றாரு, கால் வழிக்கு கீழே விழுறாரு. நான் இவங்ககிட்ட இருந்து சுட்டு வெச்சா, இவங்க அப்படியே சுட்டுட்டாங்க, நான் சொல்லிட்டேன் என் தோல்வியை ஒத்துக்கிறேன், என்னால முடியாது என்று காமெடியாக கூறியிருக்கிறார் சுந்தர் சி.