சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 1st ரன்னர் அப் ரஸ்ரின்!! மாவட்ட ஆட்சியர் கொடுத்த பரிசு..
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நஸ்ரின்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலேவுடன் நிறைவு பெற்றது. டைட்டில் வின்னராக காயத்ரி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
முதல் ரன்னர் அப் இடத்தினை ராணிப்பேட்டையை சேர்ந்த நஸ்ரின் தேர்வு செய்யப்பட்டார். நஸ்ரின் தான் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
மாவட்ட ஆட்சியர்
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நஸ்ரினை அழைத்து பாராட்டி இருக்கிறார். அப்போது பாடவா உன் பாடலை என்ற பாடலை நஸ்ரின் பாடி அசத்தினார். நஸ்ரின் பாடுவதை கேட்ட ஆட்சியர் மெய்மறந்து நின்று கேட்டுள்ளார்.
மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்த நஸ்ரினை பாராட்டிய கலெக்டரால், அவரின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நஸ்ரினுக்கு மாவட்ட ஆட்சியர் திருக்குறள் உரையை பரிசாக அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.