விஜய் டிவியே கதியாக இருக்கும் பிரியங்கா!! சம்பள விசயத்தில் ஏமாற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி...
விஜய் தொலைக்காட்சி சேனலில் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் மிகப்பெரிய ஆதரவையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் பெற்று வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார் விஜே பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் 9 சீசனையும் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.
சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியின் இறுதி போட்டி நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 3 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா 11 மணிக்கே வந்திருப்பதால், சில விசயத்தை கூறி புலம்பி இருக்கிறார்.
தான் சமத்து பெண் என்றும் அதனால் தான் நான் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு பார்க்க முன்பே வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். எல்லா வேலையும் நடக்கிறதா என்பதை பார்க்க வந்துவிட்டேன்.
விஜய் டிவிக்கு அதிகமாக வேலை பார்த்ததாகவும் ஆனால், சம்பளம் தான் ஏத்த மாட்றாங்க என்று புலம்பி இருக்கிறார். அவர் பேசிய அந்த வீடியோவை விஜய் டிவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை பகிர்ந்துள்ளார் விஜே பிரியங்கா.