வெளிநாட்டு மது போதைக்கு அடிமை! அடையாளம் தெரியாமல் காணாமல் போன சூர்யா பட வில்லன்..
தமிழ் சினிமாவில் கொடூர வில்லன்களாக அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிக்காட்டாத நடிகர்கள் காணாமல் போயுள்ளனர்.
அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகர் ஜீவன். அவரது குடும்பமே பணக்காரக்குடும்பம் என்பதால் நடித்து பணம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி பொழுதுபோக்கிற்காக படங்களில் நடித்த ஜீவன், நான் அவன் இல்லை, சூர்யாவின் காக்க காக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் அவருக்கு நடிப்பு வராத காரணத்தால் போதிய படவாய்ப்பும் அமையவில்லை. அவரது கேரியர் போவதற்கு இந்த இரண்டு முக்கிய காரணம் தான் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.
வெளிநாட்டு மதுவுக்கு அடிமையாகி குடிக்கும் பழக்கம் கொண்டவர் ஜீவன். பாடி லேங்குவேஜ், முகப்பாவனை என்று நடிப்பே வராது என்று கூறியுள்ளார். சமீபத்தில் கூட பல ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடித்து அப்படம் வியாபாரம் ஆகாமல் 20 கோடி நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.