கோப்பையை தட்டித்தூக்கிய இந்திய அணி!! மனைவியுடன் சூர்யா குமார் யாதவ் செய்த செயல்..

Suryakumar Yadav ICC Women’s T20 World Cup T20 World Cup 2024
By Edward Jun 30, 2024 08:52 AM GMT
Edward

Edward

Report

2024ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டி நேற்று இறுதி போட்டியுடன் நிறைவடைந்தது. தொடர் வெற்றிகளை குவித்த இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் நேற்று போதியது. முதலில் ஆடிய இந்திய அணி 176 ரன்கள் எடுத்து 177 ரன்கள் இலக்காக கொடுத்தது.

அதனை தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெற்றிப்பெற்ற இந்திய அணி கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பின் டி20 உலக கோப்பையை தட்டிச்சென்றது.

இந்த வெற்றியை பிரம்மாண்ட முறையில் கொண்டாடிய இந்திய வீரர்கள் கோப்பையுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது சூர்யகுமார் யாதவ் தன் மனைவியுடன் படுக்கையில் உலக கோப்பையை வைத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாமா போட்டோ எடுப்பீங்கள் என்று கிண்டல் அடித்து வருகிறார்கள்.

GalleryGallery