ஏழையா சாவேனே தவிர..அப்படி வாழவே மாட்டேன்!! நடிகை டாப்ஸி..
டாப்ஸி பன்னு
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி பன்னு, வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் பார்க்கக்கூடியவர். சமீபத்தில் டாப்ஸி அளித்த பேட்டியொன்றில் பணம் மற்றும் தன்னுடைய வாழ்க்கை முறை குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், நான் ஏழையாக சாகத்தயார், ஆனால் ஏழையாக வாழமாட்டேன். என் அம்மா, அப்பா, தங்கை மூன்று பேரும் எனகு முற்றிலும் எதிரானவர்கள். அவர்கள் இறந்தப்பின் பணத்தை தங்களுடன் எடுத்துச் செல்பவர்களை போல் செலவு செய்வார்கள்.
அதாவது, இங்கே எங்கும் செலழவித்துவிடக் கூடாது, நம் பணம் மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்பது போல் நடந்து கொள்வார்கள். ஆனால் தான் சம்பாதிப்பதை தனக்காகவே செலவழிக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை.
நான் ஏழையாக இறக்க விரும்புகிறேன், ஆனால் ஏழையாக வாழ விரும்பவில்லை என்ற எண்ணத்தில் தான், நான் இன்ஜினியரிங் படிக்கும்போதே மாடலிங் செய்யத்தொடங்கினேன்.

வாழக்கையில் சலிப்பு ஏற்படக் கூடாது என்ற நம்பிக்கையில், எந்த வேலைய செய்வதால் எனக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் கிடைக்கிறதோ, அதையே செய்ய விரும்புகிறேன். வாழ்க்கை ஒருமுறைத்தான், அதனால் என் நேரத்தை நான் சும்மா வீணடிக்க விரும்பவில்லை என்று டாப்ஸி பேசியுள்ளார். அவர் நடிப்பில் நெட்ஃபிளிக்ஸின் ஆக்ஷன் த்ரில்லர் படமான காந்தாரி படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.