படுத்துக்கொண்டே திருத்தட்டனமாக வீடியோ எடுப்போம்!! சிக்கிய தமிழ் ராக்கர்ஸ் குழு..
தமிழ் ராக்கர்ஸ்
டாப் நடிகர்களின் படம் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை திரைக்கு வரும் படங்களை வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவு செய்து பல தயாரிப்பாளர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டு வருபவர்கள் தமிழ் ராக்கர்ஸ். பல ஆண்டுகள் இவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகளில் போலிசார் ஈடுபட்டனர்.
அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் கேரளா போலிசார் அதிரடியாக் மதுரையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் முக்கிய நிர்வாகியை கைது செய்தனர்.
இதனைதொடர்ந்து போலிசார் தியேட்டரில் அதிரடி வேட்டை நடத்தியதில் செல்போனில் வேட்டையன் படத்தை பதிவு செய்துகொண்டு இருந்த இரு ஐடி ஊழியர்களை கேரளா மாநில காவல்துறையினர் கைது செய்து விசாரித்துள்ளனர்.
அதில் எவ்வளவு சம்பாதிக்கலாம் எப்படி வீடியோ எடுத்தோம் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். படத்தை தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றுவதால் தங்களுக்கு 40 ஆயிரம் முதல் சில லட்சம் வரை பணம் வரும் என்று கைதான குமரேசன், பிரவீன் குமார் தெரிவித்துள்ளனர்.
படுத்துக்கொண்டே வீடியோ
மேலும் தமிழ் மொழிபடங்கள் வெளியாகும் போது கேரளா மற்றும் கர்நாடகாவில் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் தியேட்டர்களுக்கு சென்றும் கூடுதல் இருக்கைகளை முன்கூட்டியே புக் செய்து திரையரங்கௌ நிர்வாகத்திற்கு தெரியாமல் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்வோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
மேலும் முக்கிய படங்கள் வெளியாகும் முதல் நாளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் படுத்துக்கொண்டே திரைப்படம் பார்க்கும் வசதி கொண்ட திரையரங்குகளில் முதல் வரிசையில் 5 இருக்கைகளை புக் செய்வோம்.
வரிசையாக அமர்ந்து கேமராவை பெட்சீட்டில் மறைத்தபடி வீடியோ எடுப்போம் என்றும் வேட்டையன் படத்தின் வீடியோ எடுத்த போது சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.