முத்தக்காட்சியில் நடிக்க வைக்க போராடிய கிருத்திகா உதயநிதி!! உண்மையை கூறிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்
தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமார் நடிப்பில் 2016ல் வெளியான பலே வெள்ளையத் தேவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இப்படத்தின் தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிக்கர், அஜிலன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வந்த தன்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரசவாதி என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகும் இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் தன்யா, சில விசயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் பேப்பர் ராக்கெட் படத்தில் முத்தக்காட்சியை பார்த்து உதயநிதி என்னை கலாய்த்தார் என்றும் நீங்க என்னங்க இப்படி பண்ணிட்டீங்க என்றும் சொன்னார். அதான் கிரு மேம் விடவில்லையே, என் அம்மா கிட்ட சம்மதம் வாங்கி தான் நடிக்க வைத்தார்கள்.
சும்மா அந்த காட்சியை வைக்கவில்லை, என் கதாபாத்திரத்திற்காக, கதைக்காக அது தேவைப்பட்டதால், அது தவறாக போகாது என்று நினைத்து தான் நடித்தேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன்.
You May Like This Video