விஜய் அம்மாவிடம் சங்கீதா இப்படித்தான் நடந்துப்பாங்களாம்!! அதுவும் எல்லாத்துக்குமே இதானாம்...
விஜய் - சங்கீதா
தன் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்தார். அவர் விவாகரத்து மனுதாக்கல் செய்த சில நாட்களில் நடிகர் விஜய் - திரிஷா இருவரும் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஒரே நிறத்தில் ஆடையணிந்து சென்ற விவகாரம் இன்று வரை பேசுபொருளாக மாறியிருக்கிறது.

பலர் இதுகுறித்து விமர்சித்து பேசி வரும் நிலையில், இதுகுறித்து எதுவும் பேசாமல், ஒரு கூட்டத்தில் இந்தப் பிரச்சனையெல்லாம் அவ்வளவு வொர்த் கிடையாது என்று அசால்ட்டாக பேசியிருந்தார்.
இதனையடுத்து விஜய், சங்கீதா, திரிஷா குறித்த பழைய விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அளித்த பேட்டியொன்றில் சங்கீதா குறித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

விஜய்யின் தாயார் ஷோபா
அதில், சங்கீதாவுக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்டுத்தான் நான் சமைத்துக்கொடுப்பேன். நானாக சமைக்க மாட்டேன். நான் ஃபோன் செய்து கேட்டால், இருங்க அத்தை பசங்களிடம் கேட்டுச்சொல்றேன் என்று சொல்லி, சஞ்சயிடமும், சாஷாவிடமும் ஆச்சி வீட்டுக்கு போறோம், என்ன வேண்டும் என்று கேட்பார்.

அதற்கு குழந்தைகளோ பிரியாணி கேட்பார்கள். நானும் செய்து வைப்பேன். அவர்கள் வீட்டுக்கு வந்து திருப்தியாக சாப்பிடுவார்கள். அதுவும் ஜேசன் சஞ்சய்தான், ஆசம் ஆசம் என்று சொல்லிக்கொண்டே சாப்பிடிவார், எல்லா விஷயத்திலும் சங்கீதா அப்படித்தான் என்று ஷோபா பகிர்ந்துள்ளார்.