நான் எந்த காதல் ஜோடியையும் பிரித்துவிட்டதே இல்லை.. சர்ச்சைக்கு இடையில் வைரலாகும் திரிஷாவின் பேச்சு
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்க்கும் வேறொரு நடிகைக்கும் இடையே உறவு உள்ளது என்றும், தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை சொல்வேன் என்றும் சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

திருமண நிகழ்வு ஒன்றில் நடிகை திரிஷாவுடன் விஜய் ஒன்றாக சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய்யும் திரிஷாவும் இப்படி செய்ததற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், விமான நிலையத்தில் விஜய்யுடன் சேர்ந்து திருமணத்திற்கு சென்றது குறித்து திரிஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், அதற்கும் அவர் எந்த பதிலையும் கூறாமல் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷன் சமயத்தில் திரிஷா பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில் "நான் எந்த காதல் ஜோடியையும் பிரித்துவிட்டதே இல்லை. அதற்காக நான் நல்ல பெண் என்றெல்லாம் கிடையாது. மற்றவர்களின் காதலில் எனக்கு கவனமும் இல்லை. அப்படி செய்ததும் இல்லை. அதே சமயம் சிலரில் காதல்களை நான் சேர்த்து வைத்திருக்கிருக்கிறேன்" என கூறியுள்ளார்.