நடிகை அசின் சினிமாவை விட்டு ஓரங்கட்ட இப்படியொரு அரசியலா? வாய்ப்பு கொடுத்து சிக்கிய விஜய்..
தமிழ் சினிமாவில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அசின். இப்படத்தினை தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, வரலாறு, போக்கிரி, சிவகாசி, வேல், தசவதாரம், காவலன் போன்ற தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தார்.
கடந்த 2016ல் தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். திருமணமாகி அரின் ரேய் என்ற மகளை பெற்றெடுத்தார். தற்போது வெளியில் தலையை காட்டாத அசின் சினிமாவில் இருந்து விலக திருமணம் தான் என்று கூறப்பட்டது.
ஆனால் அது இல்லை வேறொரு ரகசியம் தான் என்று கூறப்படுகிறது. தமிழில் அடுத்தடுத்த நடித்து வந்த அசின், பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் ரெடி படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார்.
அப்போது ஒரு காட்சிக்காக இலங்கைக்கு ஷூட்டிங்கிற்கு சென்றது படக்குழு. அப்போது இலங்கை போர் தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் நடந்த சமயம் என்பதால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போகக்கூடாது என்றும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரக்கூடாது என்ற பெரிய அரசியல் நடந்துள்ளது.
ஆனால் பாலிவுட் வாய்ப்புகளை நம்பி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அசின், அதை மீறி அசின் இலங்கைக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அசினை இனிமேல் தமிழில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைக்கக்கூடாது என்று அரசியல் அமைப்பு சிலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதனை அடுத்து பாலிவுட்டில் தோல்விகளை சந்தித்த அசின், தமிழில் திரும்பிவிடலாம் என்று முயற்சித்தும் வாய்ப்புகள் கிடைக்கவிடாமல் செய்துள்ளனர். அதன்பின் நடிகர் விஜய்யின் காவலன் படத்தில் நடிக்கும் போது கூட படத்திற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதை புரிந்து கொண்ட அசின் சினிமாவில் இருந்து விலகி தொழிலதிபரை மணந்தார்.