என்னது 5000, 10000 கோடியா!! விஜய் பற்றி உளறிய புஸ்ஸி ஆனந்த்!! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அதன் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்ப்பாக பல வேலைகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்களை கவுரவித்து விருதினையும் காசோலையையும் வழங்கியிருந்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கள்ளக்குறிச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு பேசியிருக்கிறார்.
அவர் பேசுகைய, 5000, 10,000 ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய வருகிறார் … 2026-ல் தளபதி நாம் தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும்"… புஸ்ஸி ஆனந்த பேசியிருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னது 5 ஆயிரம், 10 ஆயிரம் கோடியை விட்டுவிட்டாரா விஜய் என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து பிஸ்ஸி ஆனந்தை கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தளபதி அவர்கள் 5000, 10000 கோடிகளை விட்டு விட்டு அரசியலுக்கு வருகிறார்
— Trollywood 𝕏 (@TrollywoodX) July 8, 2024
- புஸ்ஸியார் ஆவேசம் 🔥 pic.twitter.com/noJal5eEyQ