சொல்லிக்கொடுத்த வாத்தியாருடன் பீர் குடித்த கோட் இயக்குநர்.. ஆளு பளே கில்லாடி தான்...
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் கோட் படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் கோட் படத்தின் பிரமோஷன் சமயத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு சில தகவலை பகிர்ந்திருக்கிறார்.
பல்கலைக்கழக்கத்திலேயே Bar
நான் லண்டனில் படித்த பல்கலைக்கழக்கத்திலேயே Bar இருக்கும். எனக்கு சொல்லிக் கொடுத்த ஃப்ரொபஸ்ர் உடனேயே அமர்ந்து நான் பீர் குடித்திருக்கிறேன். பீர் குடித்துவிட்டும் க்ளாஸ் அட்டெண்ட் செய்த்திருக்கிறேன். அங்கு அது சாதாரணம்.
ஆனால் இங்குதான் தண்ணி அடிப்பதை பெரிய தவறாக பார்க்கிறார்கள், ஏனென்றால் நம் கலாச்சாரம் அப்படி என்று வெங்கட் பிரபு பேசியிருக்கிறார். இதனால் தான் அவர் படங்களில் அதிகமான பார்ட்டி காட்சிகள் வைத்திருக்கிறாரோ என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.