பீதியை கிளப்பிய வடிவேலு.. கே எஸ் ரவிக்குமாரை அலறவிட்ட வைகைபுயல்..
தமிழ் சினிமாவின் காமெடி லெஜெண்ட் என்று கூறப்படும் நடிகர் வடிவேலு பல ஆண்டுகளுக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
ரெட்கார்ட் கொடுத்தப்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள வடிவேலு பக்கம் தான் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் செல்கிறார்கள்.
அப்படி குணச்சித்திர கதாபத்திரங்களில் நடித்து வரும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பியை வைத்து ஒரு படத்தினை இயக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் படத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய யோசித்துள்ளனர்.
அதற்காக வடிவேலுவை சந்திக்க படக்குழு தயாரிப்பு தரப்பில் சென்றுள்ளனர். அப்போது வடிவேலு சம்பளமாக 5 கோடியாக கொடுக்க வேண்டும் என்ற குண்டை போட்டுள்ளார். சம்பளத்தைகேட்டு அப்படியே திரும்பி இருக்கிறார்கள் படக்குழு.
கே எஸ் ரவிக்குமார் படம் என்பதை விட வடிவேலுவின் பல ஆண்டுகள் கழித்துள்ள மார்க்கெட்டால் இத்தனை கோடி கேட்டுள்ளாராம். அதிலும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகினால் தான் வடிவேலுவின் ஃபார் இருக்கிறதா இல்லையா என்பது தெரியும்.