அவங்க ஒரு பைத்தியம்.. வம்பிழுத்த சுசித்ராவை வச்சு செய்த வைரமுத்து
தமிழ் சினிமாவில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி 7 தேசிய விருதுகளை வென்ற வைரமுத்து இணையத்தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.
அதில், வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்.
தொடர்பற்ற மொழிகள் பேசுவர், பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர் தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர் இந்த நோய்க்கு 'Messianic Delusional Disorder’ என்று பெயர் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர், இரக்கத்திற்குரியவர்கள், அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள்.
உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும் என அந்த பதிவில் வைரமுத்து அவர்கள் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே அவரை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
இதில் சின்மயியை தொடர்ந்து பாடகி சுசித்ராவும் வைரமுத்து பற்றி சர்ச்சையான கருத்தினை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு தான் வைரமுத்து சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
வாழ்வியல் தோல்விகளாலும்
— வைரமுத்து (@Vairamuthu) September 20, 2024
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்
பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம்…