சத்தமில்லாமல் அஜித்திடன் அடிவாங்கிய விஜய்பட தயாரிப்பாளர்.. சைலெண்டாக அஜித் வைத்த ஆப்பு..
தமிழ் சினிமாவில் இரு உச்சக்கட்ட நட்சத்திரங்களாக ரஜினி, கமல்-க்கு பின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் நடித்த படங்கள் 14 ஆண்டுகளுக்கு பின் போட்டிப்போடப்பட்டது.
ஆனால் தங்களுக்குத்தானே எந்த சண்டையும் இல்லை ஆனால் சினிமாவில் போட்டி இருக்கத்தான் செய்யும் என்று முன்பில் இருந்தே இருவரும் கூறி வந்தனர். ஆனால் நடிகர் விஜய் தனக்கு போட்டி நான் தான் என்று வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசி சுயநலத்தை காட்டினார்.
அப்படி வாரிசு படத்தினை துணிவுடன் போட்டிப்போட்டு ரிலீஸ் செய்தார். விஜய் எப்பவும் தனியாக தன் படத்தினை ரிலீஸ் செய்து பல வசூல் சாதனைகளை படைத்து தான் தான் நம்பர் ஒன் என்ற பிம்பத்தை வைத்து வந்தார். தற்போது அஜித் அந்த மிகப்பெரிய பிம்பத்தை உடைத்து சுக்குநூறாக்கியுள்ளார்.
துணிவு படத்தினைவிட வாரிசு வசூலில் கோடியை பார்த்தாலும் விஜய் இதற்கு முன் கொடுத்த பிளாக் பஸ்டர் படத்தின் வசூலைவிட இது மிகவும் கம்மிதான். படம் அஜித்துடன் அதுவும் ரெட் ஜெயண்ட் போட்ட பிளானால் விஜய்யின் வியாபாரமும் பல சோதனைகளையும் வாரிசு தயாரிப்பாளர் சந்தித்து வந்தார்.
வாரிசு படம் தனியாக வெளியில் வந்தால் கம்மியான விலைக்கு போகாமல் பெரிய தொகைக்கு விநியோகஸ்தர்கள் எடுத்து விற்றிருப்பார்கள். ஆனால், துணிவுடன் போட்டிப்போட்டதால் கம்மியான தொகைக்கு வியாபாரமாகி வெங்கடேஸ்வரா நிறுவன உரிமையாளர் தில் ராஜுவுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது.
இதற்கு அஜித் போட்ட மிகப்பெரிய ஆப்பால் விஜய்யின் மார்க்கெட் உடைந்தும் நம்பர் ஒன் என்ற பிம்பமும் உடைந்திருக்கிறது.