கதையில் சூர்யா செய்த செயல் தோல்விக்கு காரணமே அதான்... குண்டைத்தூக்கி போட்ட வெங்கட் பிரபு..
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சியை திரையிட சில சலசலப்பான பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, படத்தின் பிரமோஷனுக்காக வெங்கட்பிரபு பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், சூர்யாவை வைத்து நான் இயக்கிய மாசு படம் வேறுமாதிரியாக ட்ரீட் செய்திருந்தேன். முழுக்க முழுக்க ஹியூமர் சப்ஜெக்ட்டாகத்தான் யோசித்திருந்தேன்.
ஆனால் சூர்யாவின் தரப்பு என்னிடம் மங்காத்தா மாதிரி ஒரு மாஸ் படம் பண்ணிருக்கீங்க, அந்த எலிமெண்ட்ஸ் வேண்டும் என்று கூறியதால் நான் கொஞ்சம் கதையை மாற்றியதால் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மாசு படதோல்வி சூர்யா தலையிட்டதால்தான் தோல்வியடைந்ததா என்று விமர்சித்து வருகிறார்கள்.