அணில் ஆமை என ரசிகர்களிடையே சண்டை.. இயக்குனர் வெங்கட் பிரபு ரியாக்ஷன் இதுதான்
இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே மோதல் என்பது காலகாலமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எம் ஜி ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் இரு தரப்பு ரசிகர்களும் இப்படி மோதி கொள்கிறார்கள்.
இதில் விஜய் - அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் விஷயங்களும், அணில் - ஆமை என பட்ட பெயர்கள் வைத்து கேவலமான வகையில் பேசும் விஷயங்களும் முகம் சுழிக்க வைக்கிறது என பலரும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி ஒருவர் இந்த அணில் ஆமை சண்டை குறித்து என்ன நினைக்கிறீங்க சார் என கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்த "இதை பெரிதாக நான் கவனித்தது இல்லை. ஓரளவுக்கு தெரியும், ஆனால் ஏன் இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை. எதற்காக அணில் புகைப்படத்தை போடுகிறார்கள், எதற்காக ஆமை புகைப்படத்தை போடுகிறார்கள் என தெரியவில்லை. உலகம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது, டெக்னலாஜி எப்படி மாறிவிட்டது? இன்னும் அணில் ஆமையிலேயே இருக்கிறார்கள்.
ரசிகர்களிடையே சண்டை என்பது எப்போதுமே இருக்கிறது தான். அந்த சண்டை என்பது ஆரோக்கியமாக இருந்தால் ஓகே. ஆனால், இப்போது அது மிகவும் தவறாக மாறியுள்ளது. அதுவே அவர்களுடைய குடும்பத்தை பற்றி தவறாக பேசுவது, கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது என்பது மிகவும் தவறு" என கூறியுள்ளார்.