பிரேம்ஜி கொஞ்சம்கூட சரியில்ல..மாமியார் மசாலா செய்யும் டார்ச்சர்!! புலம்பும் வெங்கட் பிரபு..
நடிகர் பிரேம்ஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பிரேம்ஜி, பார்ட்டிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு வேலை விட்டால் வீடு, வீடு விட்டால் வேலை என்று இருந்து வருகிறார்.

இதற்கிடையில், பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா என்ற தொழிலை செய்து அதற்காக பிரமோஷன் வீடியோக்களையும் தினமும் தன் மனைவி இந்துவுடன் இணைந்து பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரேம்ஜியின் அண்ணனும் இயக்குநருமான வெங்கட் பிரபு வருத்தபட்டு பேசியுள்ளார்.
மாமியார் மசாலா செய்யும் டார்ச்சர்
அதில், பிரேம்ஜி இப்போது கொஞ்சம்கூட சரியில்ல, வெளியே வரதே இல்லை. பிரேம்ஜி மாமியார் மசாலான்னு அவர் செய்யும் டார்ச்சரை என்னால் தாங்கவே முடியல. கம்பெனி பெயரையே பிரேம்ஜி மாமியார் மசாலா என்று வைத்துவிட்டான்.

தினமும் ஒரு கன்ட்டென்ட் போடுறான், அதை பார்க்கவும் முடியல. ஷூட்டிங் இருக்கிறது என்று சொல்கிறான். என்ன ஷூட்டிங்னு கேட்டா, பிரேம்ஜி மாமியார் மசாலா ஷூட்ன்னு சொல்லிட்டு கிளம்புறான். சமயங்களில் அவனுக்கு வீட்டில் இருந்து ஃபோன் வந்தால்கூட எங்களிடம் போய் வருகிறேன் என்று சொல்லாமலேயே கிளம்பிவிடுறான் என்று புலம்பி பேசியுள்ளார் வெங்கட் பிரபு.