திருமண பேச்சு எடுத்த நாளில் இருந்து பிரச்சனை! நயன்தாரா- விக்னேஷ் சிவன் எடுத்த அடுத்த முடிவு?
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன் தாராவுக்கும் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தின் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கேரளாவில் இருக்கும் நயன்தாராவின் ஊருக்கு சென்றனர். கொச்சினில் இருக்கும் கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்த புகைப்படங்களும் வெளியானது.
கொச்சினுக்கு மறந்த தம்பதியினர்:-
மறுவீடுக்காகவும், அம்மாவிடம் உடல்நிலையை விசாரித்து ஆசி வழங்கவும் சென்றுள்ளனர். திருமணமாகி ஒரு வாரமானநிலையில், நயன்தாரா விக்னேஷ் வெளியில் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
மாங்கல்யத்தில் தோஷம்
இந்நிலையில் நயன்தாராவின் மாங்கல்யத்தில் தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பதால் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர். இதற்காக திருமணத்திற்கு முன்பே சில பரிகார சடங்குகளையும் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா செய்து முடித்தார். திருமணத்திற்கு முன்பே கும்பகோணத்தில் மகாலிங்கேஸ்வரர் மங்களாம்பிகை கோவிலிலும், விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவில்களிலும் பொங்கல் வைத்து பாங்கல்ய வழிபாடு சென்றனர்.
பரிகாரம் திருமணம்:-
மேலும் மாங்கல்யத்தில் தோஷம் இருப்பதால் பரிகாரமாக இன்னொரு முறை விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம். இதனை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கூடி சீக்கிரமே செய்யவும் உள்ளார்களாம்