முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து!! நீதிமன்றத்தில் ஜூன் 15ல் என்ன நடக்கும்?
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து
முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து மனு மீதான முந்தைய விசாரணையின் போது இருவரும் நேரி ஆஜராக வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி ஜூன் 15 ஆம் தேதி அன்று நடக்கும் விசாரணையில் முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இரு தரப்புமே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்றும் தெரிய வந்துள்ளது. அதற்கு பதிலாக, இரு தரப்பு சார்பில் தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக காணொலி வாயிலாக ஆஜராவார்கள் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறனர்.
சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில், முதல்வர் விஜய் மீது மிகக்கடுமையான மற்றும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இவ்வழக்கை விசாரித்து வந்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி சசிகலா சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யபபட்டு அவருக்கு பதில் புதிய நீதிபதியாக சுஜாதா பொறுப்பேற்று இந்த வழக்கை விசாரிக்கவுள்ளார்.

இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஏற்கனவே ஜீவனாம்சம், சொத்து பகிர்வுகள் குறித்து சுமூகமான பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 15 அன்று நீதிமன்றம் எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.