எவ்வளவு வயசானாலும் அப்பா அப்பா தான்!! விஜய் தந்தை இரங்கல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் தந்தை இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் உடலுக்கு நேரில் சென்று பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தும் இணையத்தில் இரங்கலை பகிர்ந்தும் வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் பிரபல ஊடகத்திற்கு ஆடியோ கால் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் குமார் அவர்களின் தந்தையுடைய மறைவு கேட்டு வருத்தப்படுகிறேன்.
வயசானாலும் அப்பா அப்பா தான், அந்த இழப்பு மகனுக்கு எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று எல்லா பிள்ளைகளுக்கும் தெரியும்.
அப்படி தந்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் அஜித்குமாருக்கு மனஆறுதலை தரவேண்டும் என்று எல்லாவல்ல இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பெங்களூரில் இருந்து இப்போது தான் வந்திருக்கிறேன். இப்பத்தான் போன் வந்ததாகவும் விஜய் தந்தை தெரிவித்துள்ளார்.