மீண்டும் மீண்டுமா..விஜய் மற்றும் அவர் அப்பாவுக்கு இடையே வெடித்த பிரச்சனை
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கோட் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது அவரது கடைசி படமான 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார். அதன் பின், சினிமாவை விட்டு விலகி முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார் விஜய்.
கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அது தொடர்பான பணிகளில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடித்த பிரச்சனை
விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே சில காலம் முன் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், சமீபகாலமாக அந்த பிரச்சனை முடிவடைந்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தது.
அது மட்டுமில்லாமல், விஜய் கட்சியான தவெக கொடி அறிமுக விழாவில் கூட அவர் பங்கு பெற்றார். இந்நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையில் பிரச்சனை வந்துவிட்டதா என்ற பேச்சு எழுந்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்யிடம் விஜய் கட்சியின் மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, 'மாநாடு படத்தை எடுத்தவர் வெங்கட் பிரபு தான். அதனால் அவரிடம் அந்த கேள்வியை கேட்குமாறு கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து நழுவிவிட்டார்.