மேக்கப் மேன் இடம் கோபத்தை காட்டிய விஜய்.. படப்பிடிப்பில் அனைவரும் அமைதி
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படத்தின் ரிலீஸுக்கு பின் இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் பேசியபோது, படப்பிடிப்பில் நடிகர் விஜய் கோபப்பட்டது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதில் "GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் வாயில் இருந்து ரத்தம் வரும் காட்சி எடுக்க இருந்தோம். உடலில் பூசப்படும் டூப்பிளிகேட் ரத்தத்தை வாயில் வைக்க முடியாது. வாயில் வைப்பதற்கு என்றே தனி ரத்னம் ஒன்று இருக்கிறது.
ஆனால், அப்போது மேக்கப் மேனிடம் அந்த டூப்பிளிகேட் ரத்தம் இல்லை. இதனால் விஜய் சார் கடும் கோபத்தில் அந்த மேக்கப் மேனை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் யாரையும் திட்டவில்லை, கோபமாக பேசக்கூட இல்லை. ஆனால், அவர் அப்படிபார்த்தது தான் அவருடைய அதிகபட்ச கோபம். ஆனால் எங்களிடம் சாதுவாக Break-க்கு பின் இந்த காட்சியை எடுத்துக்கொள்ளலாம் என கூறிவிட்டார்.
Thalapathy's Anger ??❤ #TheGreatestOfAllTime #TheGOAT pic.twitter.com/tiEJ3fpTwm
— Rithu Vibes ? (@RithuVibes) September 8, 2024