விஜய்யின் TVK மாநாட்டுக்கு குடித்துவிட்டு வருபவர்கள் குழந்தைகள்.. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் விஜய். அவர் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் பெறும் நிலையில், திடீரென சினிமாவில் இருந்து விலகி முழு நேரம் அரசியலில் ஈடுபட போவதாக கூறி இருக்கிறார்.
அவர் தொடங்கி இருக்கும் TVK தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி நடக்க உள்ளது.
சர்ச்சை பேச்சு
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகில் பிரபலமானவராக இருக்கும் ராஜ்மோகன் தமிழக வெற்றிக் கழக மாநாடு பயிலரங்கத்தில் கூறிய விஷயங்கள் தற்போது பெரும் கண்டனத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதில், குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால், சரக்கை விற்காமல் இருக்கிறார்களா? இல்லையே.
TVK மாநாட்டுக்கு குடித்துவிட்டு வருபவர்கள் குழைந்தைகள் மாதிரி, அவர்களை எந்த வித சேதாரமும் இல்லாமல் பத்திரமாக அழைத்து வந்து, அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது, இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.