விஜய்யின் மாநாடு-ல் தூக்கி எறியப்பட்ட பாட்டில்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
விஜய்
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பின் தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாட்டை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்த நிலையில் இன்று பிரமாண்டமான முறையில் மாலை நான்கு மணிக்கு தொடங்க உள்ளது. விக்கிரவாண்டி வி சாலையில் நடக்கும் இந்த மாநாட்டிற்கு 5 லட்சம் பேர் வருவார்கள் என கூறப்படுகிறது.
வெவ்வேறு ஊரில் இருந்து பலரும் தவெக மாநாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று மாலை தொடங்க உள்ள மாநாட்டுக்கு நேற்று இரவில் இருந்தே மாநாட்டு திடலில் மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. சிலர் இரவு அங்கு வந்து தங்கிவிட்டனர்.
தற்போது மாநாட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கூடியது மட்டுமின்றி அவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைந்துள்ளனர்.
பரபரப்பு சம்பவம்
சூழல் இப்படி இருக்க மாநாடு திடலில் சூழ்ந்திருக்கும் ரசிகர்கள் தண்ணீர் இன்றி தவிப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து அங்கு இருக்கும் தொண்டர்களுக்கு தண்ணீர் பாட்டிலை கையில் வழங்காமல் தூக்கி எரிந்த படி வீசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேய் அவங்க மனுஷனுங்கடா நாய் ஒன்னும் இல்லை 🧐🧐 pic.twitter.com/J8IsLmWTYB
— சங்கர் ரஜினி ரசிகன் (@Rajinirasigan53) October 27, 2024