பிக்பாஸ் 8 குறித்து வரும் கமெண்ட்ஸ் பார்த்தா அதெல்லாம் செய்ய முடியாது.. விஜய் சேதுபதி
பிக்பாஸ் 8
கமல்ஹாசனுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஆரம்பித்ததில் இருந்தே நிறைய விமர்சனங்கள் வருகின்றன.
எல்லோரும் ஒரே மாதிரி கிடையாது, விஜய் சேதுபதி தான் எப்படியோ அப்படியே இந்த நிகழ்ச்சியையும் கொண்டு செல்கிறார், இது சிலருக்கு பிடிக்கவில்லை.
எனவே அவர் இவருக்கு ஆதரவு, அவருக்கு ஆதரவு, இப்படி செய்கிறார், அப்படி செய்கிறார் என ஏகப்பட்ட விமர்சனங்கள்.
இதுகுறித்து விஜய் சேதுபதி ஒரு பேட்டியில், என்னை நிகழ்ச்சியை விட்டு செல்ல சொன்னார்கள். நான் ரவீந்தர் முதல் வாரத்திலேயே அனுப்பியதற்கு இன்னொரு வாரம் இருக்க வைக்க கூடாதா எனலாம் கேட்டேன்.
ஆனந்தி வெளியே சென்றது, அவருக்கு குறைவான வாக்கு கிடைத்தது அதிர்ச்சியாக இருந்தது.
எனக்கு வரும் மீம்ஸ், விமர்சனங்களை எனக்கு நெருங்கியவர்கள் அனுப்புவார்கள், அதெல்லாம் பார்த்தால் நாம் என்ன செய்தாலும் சரி, தவறா என்று தான் பார்த்துக் கொண்டு இருப்போம்.
கமெண்டுகளை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என கூறியுள்ளார்.