விவாகரத்தால் குழந்தைகளின் நிலை.. முதன்முறையாக காரணத்தை உடைத்த விஜய் யேசுதாஸ்
விஜய் யேசுதாஸ்
சினமா வட்டாரத்தில் சமீபத்தில் பல ஜோடிகளின் விவாகரத்து செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஜெயம் ரவி, ஜி.வி. பிரகாஷ், தனுஷ் என இன்னும் சிலர் தங்களது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
இதில், நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் மற்றும் நடிகைகளின் விவாகரத்து அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தினாலும் விவாகரத்து குறித்த காரணங்களை தேடுகின்றனர்.
அந்த வகையில், ஒரு நடிகர் தனது விவாகரத்து குறித்து அறிவித்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட நடிகரை மட்டுமே காரணமாகக் கூறி கிசுகிசுத்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
விவாகரத்து காரணம்
இந்நிலையில், பாடகர் விஜய் யேசுதாஸ் அவரது விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். அதில், "நானும் என் மனைவியும் பரஸ்பரமாக தான் பேசி விவாகரத்து பெற்றோம்.
எங்களின் இந்த முடிவில் பெற்றோர்களுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. எங்கள் மகளுக்கு 15 வயது அதனால் அவர்களுக்கு எங்கள் விவாகரத்து குறித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் உள்ளது.
ஆனால், என் மகனுக்கு 9 வயது மட்டுமே அதனால் விவாகரத்து குறித்த புரிதல் என் மகனுக்கு இல்லை. எதிர்காலத்தில் இது குறித்து அவர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.