அதுக்காக பண்ண வேண்டியிருக்கு!! அந்த காட்சியில் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க பயந்து போன விக்ரம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் சிறு ரோலிலும் டப்பிங் கலைஞராக இருந்து வந்த விக்ரம், தன் உழைப்பாலும் சிறந்த நடிப்பாலும் முன்னுக்கு வந்தார்.
காசி, ஜெமினி, தூள், பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்து மிகப்பெரிய நடிகராக திகழ்ந்து வந்தார். அப்படி மணிரத்னம் இயக்கத்தில் 2010ல் உருவாகி வெளியான ராவணன் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.
இந்நிலையில் அப்படத்தின் போது விக்ரம் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் ஒரு காட்சியில் நடிக்க பயந்து போன விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெருக்கமான ஒரு காட்சியில் நடிக்க விக்ரம் முதலில் தயங்கியதாகவும், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் மருமகள், அபிஷேக் பச்சனின் மனைவி என்ற பயம் இருந்துள்ளதாம்.
இதை புரிந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், விக்ரமிடம் சென்று இங்க கூச்சப்படுவதற்கு ஒன்றும் இல்லை, நான் ஒரு நடிகை அவ்வளவு தான். நாம் நடிக்கும் படத்தில் இந்த காட்சிக்கு இப்படி பண்ண வேண்டி இருக்கிறது.
அதனால் எந்த பதற்றமும் இல்லாமல் நடியுங்கள் என்று தைரியமாக பேசினாராம். அதன்பின் அந்த காட்சியை நடித்து முடித்தாராம் விக்ரம்.