10 மணிக்கு அதை செய்ய சொல்லி டார்ச்சர்!! விவாகரத்து செய்திருப்பேன்.. மகாலட்சுமியால் புலம்பும் கணவர் ரவீந்தர்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக மகாலட்சுமி கடந்த ஆண்டு தயாரிப்பாளரும் ஃபேட்மேன் என்று அனைவராலும் அழைக்கப்படும் ரவீந்தரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். முதல் திருமணம் முடிந்து மகன் இருக்கையில் விவாகரத்து செய்து பிரிந்தார் மகாலட்சுமி.
அதன்பின் நடிகர் ஈஸ்வருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது சர்ச்சையில் சிக்கினார். அதிலிருந்து மீண்டும் சீரியலில் நடித்து வந்த மகாலட்சுமி பல விமர்சனத்திற்கு பின் ரவீந்தரை திருமணம் செய்தார்.
தற்போது தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்து ஒரு வருடமாகிய நிலையில் சில மாதங்களுக்கு முன் பண மோசடி காரணமாக ரவீந்தர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் ஜெயிலில் இருந்தார். ஒரு மாதம் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த ரவீந்தர், மகாலட்சுமி தனக்கு எப்படி ஆறுதலாக இருந்தார் என்று எமோஷ்னலாக பேசியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், மகாலட்சுமி அன்பே வா சீரியலில் நடித்துக்கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார் ரவீந்தர். என்னை அந்த சீரியலை பார்க்க சொல்லி தினமும் டார்ச்சர் பண்ணதாகவும் தொடர்ந்து அதை பார்க்க முடியவில்லை.
அந்த சீரியலை வேறு விளம்பரம் செய்ய சொல்கிறார் மகாலட்சுமி என்றும் தெரிவித்திருக்கிறார். 10 மணிக்கு ரசிகர்கள் பார்க்க அந்த சீரியலுக்கு பிராண்ட் அம்பாசிடராக மாற்ற பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் நான் மகாலட்சுமியை விவாகரத்தே செய்திருப்பேன் என்று சிரித்தபடி கூறினார். இதையும் விவாகரத்து கேட்ட ரவீந்தர் என்று தலைப்பாக போட்டுவிடுவார்களே என்று சிரித்திருக்கிறார் மகாலட்சுமி கணவர் ரவீந்தர்.