அம்பானி மனைவி நீடா அணிந்திருந்த ஆரம்!! விலை மட்டுமே இத்தனை கோடியா?
ஆனந்த் - ராதிகா திருமணம்
முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் சமீபத்தில் மிகப்பெரியளவில் பல ஆயிரம் கோடி செலவில் நடைபெற்றது.
உலகையே திரும்பி பார்க்க வைத்த இத்திருமணத்திற்கு உலகில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு மணமகள் ராதிகாவுக்கு 21.7 கோடி மதிப்புள்ள முத்து நகைகள், வைர நகைகளை அம்பானி - நீடா வழங்கியுள்ளனர்.
பிரபலங்களும் தங்களுக்கு விருப்பமான பரிசுகளை மணமக்களுக்கு வழங்கினர். நீடா அம்பானி மிகச்சிறந்த தொழிலதிபராகிவிட்டதால் ஸ்டைலிஷ் தோற்றத்துடன் இளமையுடன் வலம் வருகிறார்.
நீடா அணிந்திருந்த ஆரம்
இந்நிலையில் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் அம்பானி மனைவி நீடா அம்பானி விலையுயர்ந்த ஆடைகள் விசேஷமான அணிகலன்களை அணிந்து வந்தார்.
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது நீடா அணிந்திருந்த ஆரம் பெரிய மரகத பச்சைநிற கல் பதிக்கப்பட்ட நெக்லஸ் அணிந்திருந்தார். அவரின் அந்த ஆரத்தை பார்த்து பலரும் வியந்து பார்த்தனர்.
அந்த ஆரத்தின் விலை சுமார் 600 கோடி ரூபாய் என்கிறார்கள். மேலும், முகலாயர் காலத்தை சேர்ந்த 55 கோடி மதிப்பிலான ஒரு வைர மோதிரத்தையும் நீடா அம்பானி அணிந்திருந்தார்.