முரளி பையனுக்கு மகளை கட்டிக்கொடுக்க பயந்தேன்!! மேடையில் உண்மையை கூறிய தயாரிப்பாளர் சேவியர்..

Atharvaa Murali Gossip Today
By Edward Jun 30, 2024 04:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து மரணமடைந்த நடிகர் முரளி, தன்னுடைய மூத்த மகன் அதர்வாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். தற்போது தந்தை இறந்து பல ஆண்டுகள் கழித்து நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

முரளி பையனுக்கு மகளை கட்டிக்கொடுக்க பயந்தேன்!! மேடையில் உண்மையை கூறிய தயாரிப்பாளர் சேவியர்.. | Xavier Britto Speech Daughter Herband Akash Murali

ஆகாஷ் முரளி சில ஆண்டுகளுக்கு முன் விஜய்யின் உறவினரும் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ மகளை திருமணம் செய்து கொண்டார். தற்போது தன்னுடைய மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் ஹீரோவாக நேசிப்பாயா படத்தில் அறிமுகமாகியுள்ளார் ஆகாஷ் முரளி. சமீபத்தில் அப்படத்தின் போஸ்டரை நடிகை நயன்தாரா அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ நிகழ்ச்சியில் பேசியபோது, முரளியின் பையனுக்கு என் மகனை கொடுக்க மிகவும் பயமாக இருந்ததாகவும் முதல் நாள் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது ஒருவிதமான பயத்தோடு சென்றதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் வீட்டிற்கு சென்றபோது அவர்கள் நடந்து கொண்ட விதம், பாசம் போன்றவற்றை பார்த்து என் மனைவியிடம் இவர்கள் நம் மகள் சினேகாவை நன்றாக பார்த்துக்கொள்வார்கள். அதற்கு காரணம் அவர்கள் அன்பானவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினேன் என சேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

Gallery