நான் செய்த தவறு தினமும் கொல்கிறது! நிகழ்ச்சியில் கதறி அழும் யாஷிகா ஆனந்த்..
தமிழ் சினிமாவின் இளம் நடிகை என்ற பெயரோடு பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதையடுத்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா, அமேரிக்காவில் இருந்து இந்தியா வந்த தோழிக்கு பார்ட்டி கொடுத்துவிட்டு வீடு திரும்பும் போது கார் விபத்தாகியது.
இதனால் சம்பவ இடத்திலேயே தோழி மரணமடைந்தார். படுகாயங்களுடன் யாஷிகா 4 மாதகாலம் படுத்த படுக்கையோடு இருந்தார். தற்போது அதில் இருந்து சரியாகிவிட்டு பழைய நிலைக்கு வந்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் நிரூப்பிற்கு நெருக்கமாக இருந்தவர் என்று வீட்டிற்குள் சென்றார்.
அந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு அதே தொலைக்காட்சியில் Where is the Party என்ற புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது 2021ல் மறக்கமுடியாத சம்பவம் என்ன என்று தொகுப்பாளர் யாஷிகாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு யாஷிகா, விபத்தாகி 3 மாதம் கழிவறை செல்ல, திரும்பவும் யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது. அதனால் என் தோழி என்னைவிட்டு சென்றுவிட்டாள். என் தவறால் இன்று வரை தினமும் என்னை கொல்லுகிறது என்று கதறி அழுதுள்ளார்.
மேலும் விபத்தின் போது உடம்பில் ஏற்பட்ட காயங்களை ரசிகர்களுகாக வீடியோ மூலம் காட்டியுள்ளார்.
