சந்தேகப்பட்டே உயிரை எடுக்கும் 5 ராசிக்காரர்கள்.. காதலரை எப்பவும் நம்ப மாட்டாங்களாம்..
காதல், திருமணம், தொழில் முறை உறவு என எதுவாக இருந்தலும் சரி அதில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். அப்படி நம்பிக்கை இல்லாமல் உருவாகும் எந்த உறவும் நீண்ட காலம் நீடிக்காது. துரதிர்ஷ்டவசமாக மற்றவர்களை நம்புவது சிலர் ராசிக்காரர்களுக்கு மிகவும் கஷ்மாக இருக்கலாம். அப்படி எந்த ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை சிக்கல்களை எதிர்கொள்வார்கள் தெரியுமா?

விருச்சிக ராசிக்கார்கள்
அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடிய மற்றும் அதிக எச்சரிக்கை உணர்வு கொண்ட விருச்சிக ராசிக்கார்கள், உண்மையான இணைப்புகள் மீது ஈர்க்கடுவார்கள். வலுவான உணர்ச்சி, சந்தேகங்கள் காரணமாக அவர்கள் ஒருவரை உடனே நம்புவது கடினம். நெருக்கமாகும் உறவு மீது எச்சரிக்கையாக இருப்பதால் அவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பொறுமையாகவும் நேர்மையும் தேவை.

மிதுன ராசிக்காரர்கள்
இரட்டை இயல்பு, கூர்மையான புத்திசாலித்தனம் கொண்ட மிதுன ராசிக்காரர்களின் நிலையான மாறுதல் சந்தேகத்தையும் மற்றவர்கள் மீது முழு நம்பிக்கையையும் வைப்பது கடினம் கொண்டவர்கள். இவர்களிடம் சீராக இருப்பதில் சிக்கல் உள்ளது. மற்றவர்களின் நோக்கங்களை சந்தேகிக்கலாம். அவர்களின் நம்பிக்கையை வெல்ல, நீங்கள் நம்பகமானவர்கள், நேர்மையானவர்கள், உண்மையான அர்ப்பணிப்புள்ளவர்கள் என்று காட்ட வேண்டும்.
கடக ராசிக்காரர்கள்
அதிக உணர்வுத்திறன், உணர்ச்சிவசப்படும் கடக ராசிக்காரர்கள், மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்க தயங்குவதால், அவர்கள் பாதிக்கப்படுவார்கள் அல்லது ஏமாற்றப்படுவார்கள் என்று பயப்படுவார்கள். மக்களை மெதுவாக மதிப்பிட்டு காலப்போக்கில் நம்பிகையை வளர்த்தப்பின் நம்பிக்கையை பெறும் போது அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். ஆனால் அவர்களின் பாதுக்காப்பை தாண்டி செல்வதற்கு நேரமும், விடாமுயற்சியும் தேவை.
கன்னி ராசிக்காரர்கள்
ஒழுங்கையும் துல்லியத்தையும் விரும்பும் பகுப்பாய்வு கொண்டு உன்னிப்பான ஆன்மாக்களாக இருக்கும் கன்னி ராசிக்காரர்கள், அவர்களின் பாதுகப்பாற்ற நடத்தை காரணமாக மற்றவர்களை நம்புவது கடினம். அவர்கள் அதிக எதிர்ப்பார்ப்புகள், தரங்களை கொண்டிருந்தால், அர்த்தமுள்ள பிணைப்புகளை நிறுவுவதில் சந்தேகம் மற்றும் தயக்கமாக இருக்கலாம். அவர்களின் நம்பிக்கையை பெற அவர்களிடம் விடாமுயற்சி, நிலைத்தன்மை, நம்பகத்தன்மை தேவை.
கும்ப ராசிக்காரர்கள்
தங்களின் சுதந்திரத்தையும், தனித்துவத்தையும் பாராட்டுகிறார்கள் மற்றும் சுதந்திரமான சிந்தனையாளர்கள் கும்ப ராசிக்காரர்கள். தங்களின் நம்பிக்கை என்ற ஒன்று வரும் போது பகுப்பாய்வு, சந்தேகத்திற்குரியவர்களாக இருக்கலாம். அதனால் மக்களை மதிப்பிடும் போது ஒருவரை நம்பும் போது அதற்கான காரணத்தை தேடுவார்கள். இதுதான் ஒதுக்கப்பட்ட நடத்தைக்கு வழவகுக்கும் என்பதால் ஒருவரை நம்புவதற்கு தகுதியான காரணங்கள் இல்லையெனிம் கும்ப ராசிகர்கள் ஒருபோதும் ஒருவரை நம்ப மாட்டார்கள்.