கணவர் இறந்தப்பின் 47 வயதில் நடிகருடன் இரண்டாம் திருமணமா!! கோபத்தில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவரும் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக டாப் இடத்திற்கு சென்றார் மீனா. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்த நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றார். அதன்பின், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணமடைந்தார். அதிலிருந்து மீண்டு வந்த மீனா மீண்டும் நடிப்பில் கவனல் செலுத்தி வருகிறார். அதன்பின் மீனா இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்றும் ஒரு நடிகருடன் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் தகவல்கள் பரவியது.
இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை என்று பலமுறை மீனா விளக்கமும் அளித்திருந்தார். அதை மீறியும் தற்போது வதந்திகள் ஓய்ந்தபாடில்லையே என்று அதற்காக கண்டனமும் தெரிவித்துள்ளார் மீனா.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சமுகவலைத்தளங்களில் உண்மைகளை சொல்லுங்கள், அது தான் நல்லது. நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அவர்களின் பெற்றோர்கள் குழந்தைகள் பற்றி யோசியுங்கள் என்றும் தற்போதைக்கு எனக்கு இரண்டாம் திருமணம் பற்றிய சிந்தனை இல்லை, எதிர்கால முடிவு பற்றி எப்படி சொல்ல முடியும், எனவே 2ஆம் திருமணம் என்று வெளியாகும் வதந்திகளை யாரும் கண்டுக்கொள்ள வேண்டாம் என்றும் மீனா கூறியிருக்கிறார்.
You May Like This Video