9 வருஷமா வாய்ப்பில்லை..ஆனா சொத்து மட்டும் ரூ. 650 கோடி!! யார் அந்த நடிகை?
சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் திடீரென வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் ஒருசிலருக்கு மட்டும் தான் பல ஆண்டுகள் கடந்து நாயகிகளாக நிலைக்க செய்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை பெறுவார்கள்.
பிரியங்கா சோப்ரா
அப்படியான ஒருவர்தான் நடிகை பிரியங்கா சோப்ரா. அவர் படம் வெளியாகி ஹிட்டடித்து 9 வருடமாகிறது. இருந்தாலும் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.
ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை வாங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் மாலதி மேரி சோப்ரா ஜோனஸ் என்ற மகளை பெற்றெடுத்தார்.
ரூ. 650 கோடி
ஹாலிவுட், பாலிவுட் என கொடிக்கட்டி பறந்து வரும் பிரியங்கா சோப்ராவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 650 கோடியாம்.
அண்மையில் வெளியான சிட்டாடல் தொடருக்காக சுமார் ரூ.41 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். மகேஷ் பாபு - ராஜமெளலி கூட்டணியில் உருவாகவுள்ள படத்திலும், கிரிஷ் 4 படத்திலும் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.