முன்னாள் மனைவிகளுடன் ஒரே குடும்பமாக இருக்கும் ஆமிர் கான்.. என்னது..!
பாலிவுட் திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான். இவர் நடிப்பில் தற்போது லால் சிங் சத்தா எனும் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. நடிகர் ஆமிர் கான் கடந்த 1986ஆம் ஆண்டு ரீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
16ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின், 2005ஆம் ஆண்டு இயக்குனர் கிரண் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடனும் 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த ஆமிர் கான், கடந்த 2021ஆம் ஆண்டு கிரணை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில், விவாகரத்துக்கு பின்பும் தனது இரு மனைவிகளுடன் நல்ல நட்புறவு கொண்டுள்ளாராம் ஆமிர் கான். அதுமட்டுமின்றி தனது இரு மனைவிகளையும் வாரத்தில் ஒரு முறையாவது சந்தித்து விடுவாராம். விவாகரத்துக்கு பின்னும் நாங்கள் ஒரே குடும்பமாக தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார் நடிகர் ஆமிர் கான்.